அடுத்த ஒரு வாரமாக தமிழகம் குளிரில் நடுங்க போவதாக சில தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த நிலையில் அதனை மறுத்து சென்னை வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை வானிலை மையம் விளக்கம்:
கடந்த சில நாட்களாக சூரியன் பூமியை விட்டு தொலை தூரத்திற்கு சென்று உள்ளதால் அடுத்த ஒரு வாரத்திற்கு கடும் குளிர் வாட்டி வதைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதனை மறுத்து சென்னை வானிலை மையம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.மேலும் சமூக வலைதளங்களில் பரவும் இந்த மாதிரியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என்றும் சென்னை வானிலை மண்டலம் அறிவித்ததாக பரப்பப்படும் செய்திகளும் உண்மையல்ல என்று வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் காற்றின் வேகம் அவ்வப்போது மாறுதல் ஏற்படுவதால் குறிப்பிட்ட சில இடங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக 35-36 டிகிரியும் குறைந்தபட்சமாக 27-28 டிகிரி வெப்பநிலையும் நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்