நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

0
நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

தமிழ் சினிமாவில் எக்கசக்க படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வந்து கொண்டே தான் உள்ளது. இப்படி இருக்க நடிகை த்ரிஷா குறித்து இவர் தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. மேலும் பெண்களை தரக்குறைவாக பேசியதால் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையம் இவர் மீது வழக்கு பதிவு செய்ததிருந்தது. இதைத் தொடர்ந்து தான் பேசியதற்கு திரிஷாவிடம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டிருந்தார்.

மூத்த குடிமக்களுக்கு பம்பர் ஆஃபர்.., மாதம் இனி 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.., உடனே சேரவும்.., முழு விவரம் இதோ!!!

இதற்கிடையில் இவர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த குஷ்பூ, மீனா, த்ரிஷா உள்ளிட்டோர் மீது மன்சூர் அலிகான் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி மன்சூர் அலி கானுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து அவரது வழக்கை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் திரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த உத்தரவை உறுதி செய்தும் நீதிபதிகள் ஆணை வெளியிட்டனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here