கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதன் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகம்
கொரோனவால் மார்ச் மாதம் 24 இல் தொடங்க பட்ட இந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் தற்போது ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்ட சில தளர்வுகளால் தற்போது சென்னையின் நிலை மோசமாகி வருகிறது.
அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் இந்த கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விடுதியை ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி மாநகராட்சி நோட்டீஸ் விடுத்துள்ளது.