சென்னையில் வீடுகள் மற்றும் அலுவலக குடிநீருக்கு முக்கிய மூலதனமாக இருக்கும் கேன் மினரல் வாட்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.
என்ன காரணம்..?
கேன் மினரல் வாட்டர் பொதுவாக விவசாய நிலங்களில் போர் அமைத்து அதன் மூலம் பெறப்படுகிறது. இதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். எனினும் சில நிறுவனங்கள் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை திருடி விற்பதாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. அதை விசாரித்த நீதிமன்றம் அதற்கு பல கட்டுப்பாடுகளை பிறப்பித்து உத்தரவிட்டது.
அதனை எதிர்க்கும் வகையில் கேன் குடிநீர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் சங்கம் இன்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |