விஜய் டிவியில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி ஷோ தான். என்னதான் இந்த நிகழ்ச்சி சமையலை மையமாக வைத்து இருந்தாலும், பார்ப்பவர்களுக்கு முழுக்க முழுக்க குறைவில்லாத சிரிப்பை பரிசாக அளித்து வருகிறது. அதன்படி இதில் கோமாளியாக கலந்து கொள்பவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்து வருகிறது.
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., வயது உச்ச வரம்பு உயர்வு.., அரசாணை பிறப்பித்த தமிழக அரசு!!!
இது ஒரு புறம் இருக்க, கடந்த 4 சீசன்களில் நடுவராக கலக்கி வரும் வெங்கடேஷ் பட் மொத்தமாக இதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்ட அவர், எனக்கு வேறொரு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது, அது என்ன என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.