தமிழகத்தில் வரும் 24-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு நடைபெற உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளியில் இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால் அப்பள்ளியில் எழுதும் தேர்வர்களை வேறொரு தனியார் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் கதைக்கு ஓகே சொன்ன சூப்பர் ஸ்டார் – விரைவில் வெளியாகும் மாஸ் அப்டேட்!!
தேர்வு மையம் மாற்றம்:
தமிழகத்தில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி அண்மையில் வெளியிட்டுள்ளது . மேலும் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குரூப் 4 தேர்வுக்கு கிட்டத்தட்ட 1200 தேர்வர்களுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை மாற்றம் செய்து வேறொரு பள்ளி தேர்வு மையமாக கொடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அதாவது, தற்போது கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அந்த பள்ளியை ஒட்டுமொத்தமாக அடித்து நொறுக்கி தீக்கிரையாகின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அந்த பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட முடியாததால் புதிய தேர்வு மையமாக நீலமங்கலம் ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளி, ஏ.கே.டி. நினைவு வித்யாசாகர் பள்ளி தேர்வு மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்