அரியலூர் மாவட்டத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற ஜூலை 26 அன்று உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்விற்கான முக்கிய அறிவுப்பு – தேர்வாணையம் அறிவித்த தகவல்!
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று புகழ்மிக்க பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு கோயில் ஆலயத்தில் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் பிரமாண்டமாகவும் வெகு விமர்சையாக வும் சீரும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருவது வழக்கத்தில் ஒன்றாகும். இந்நிலையில் வருகிற ஜூலை 26 அன்று மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை தொடர்ந்து உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதாவது, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வெகு சிறப்பாக கொண்டாட இருக்கும் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்திருக்கும் நிலையில் தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள் மற்றும் பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் மட்டும் வருகிற ஜூலை 26 உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்