மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்படும் என AICPI குறியீடு மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி 2024 ஜனவரி மாத அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்படும் பட்சத்தில், 8 வது ஊதியக்குழு அமல் படுத்துவது அல்லது ஊதிய உயர்வுக்கான ஃபிட்மெண்ட் பாக்டர் உயர்த்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் அடுத்த 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இதற்கு முன்னதாகவே அரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மத்திய மோடி அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் பட்சத்தில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000லிருந்து ரூ.26,000ஆக உயரும் என பலரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.