காவிரி நீர் விவகாரம்: தமிழகத்திற்கு வினாடிக்கு 6500 கன அடி தண்ணீர்., கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு!!!

0
காவிரி நீர் விவகாரம்: தமிழகத்திற்கு வினாடிக்கு 6500 கன அடி தண்ணீர்., கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு!!!
காவிரி நீர் விவகாரம்: தமிழகத்திற்கு வினாடிக்கு 6500 கன அடி தண்ணீர்., கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு!!!

தமிழக விவசாயிகளின் நலன் கருதி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என அண்மையில் காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யும் படி கர்நாடக அரசு நேற்று (அக்டோபர் 1) டெல்லியில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையில் காவிரி மேலாண்மை உத்தரவுக்கு எதிராக கன்னட அமைப்புகள் உள்ளிட்ட பலரும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடாவிட்டாலும், பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், தமிழகத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி நீர் இயற்கையாகவே கிடைக்கிறது. அதை விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாங்கள் தடுக்கவில்லை. இருந்தாலும் காவிரி நீர் விஷயத்தில் சட்டப் போராட்டம் தொடரும்.” என கூறியுள்ளார்.

தமிழக பள்ளிகள் திறப்பில் மாற்றமா?? வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here