இன்றைய காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ் பலருக்கும் மணப்பெண் கிடைக்காமல் சிங்கிளாகவே கவலையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ரூவாண்டாவை சேர்ந்த கேலிப்ரே நிஸாம்விடா (Callixte Nzamwita) என்பவர், பெண்கள் எவரும் தன்னை நெருங்க கூடாது என வீட்டை சுற்றி 15 அடி வேலி அமைத்து உள்ளார். இப்படியாக தனது 16 வயது முதல் 55 ஆண்டு காலமாக கொள்கையை பின்பற்றி வருகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இவருக்கு தேவையான பொருட்களை அக்கம்பக்கத்தினர் வாங்கி வீட்டுக்குள் வீசி விடுவார்கள். இவர் தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருவதால், “இவர் தான் ஒரிஜினல் முரட்டு சிங்கிள்” என கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் இவருக்கு Gynophobia எனும் உளவியல் நோய் இருப்பதால், பெண்களை பார்த்து பயப்படுகிறார் என கூறுகின்றனர்.