தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று கூறிய பாஜக தலைவர் அனுபம் ஹஸ்ராவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய பாஜக தேசிய செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு:
மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 2.6 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
2019 ஜனவரியில் பாஜகவில் இணைந்த மேற்கு வங்காளத்தின் போல்பூரைச் சேர்ந்த முன்னாள் திரிணாமுல் கட்சி முன்னாள் எம்.பி., அனுபம் ஹஸ்ரா தேசிய செயலாளராக நியமிக்கப்பட்ட அடுத்த நாள் ஒரு கூட்டத்தில் பேசுகையில், ஒருநாள் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், நான் முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் சென்று அவரை கட்டி அணைத்துக் கொள்வேன் என மிரட்டும் வகையில் பேசினார். மேலும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, தங்களது அன்பானவர்களை இழந்தவர்களின் வலியைப் புரிந்து கொள்ளுங்கள் என கூறினார்.
ஒரு பெண் அரசியல் தலைவருக்கு எதிரான இவரின் அவதூறான கருத்துக்கள் திரிணாமுல் காங்கிரஸின் தொண்டர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து அதிமுக எம்எல்ஏ.,கள் சென்னைக்கு வர வேண்டும் – தலைமையகத்தில் இருந்து உத்தரவு!!
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுபம் ஹஸ்ராவிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.