ஒவ்வொருவரின் முகத்திரையையும் நான் கிழிப்பேன் – அர்ச்சனாவை வச்சு செய்யும் ஆரி!! தெறிக்கவிட்ட ப்ரோமோ!!

0
bigg boss 4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல சண்டைகள். காதல், பாசம் என பல முகங்களுடன் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் இந்த வாரத்தில் சுவாரசியம் குறைந்த போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சக போட்டியாளரிடம் சண்டைகள் ஏற்படுகிறது. மேலும் ஆரி இங்கு இருக்கும் ஒவ்வொருவரின் முகத்திரையை என்னால் கிழிக்க முடியும் என்று சவால் விடுகிறார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

பிக் பாஸ்

தற்போது பிக் பாஸில் பல விறுவிறுப்பான சம்பவங்கள் போய்க்கொண்டுள்ளது. கடந்த இரு தினங்களாக பாலாஜிக்கும், அர்ச்சனாவிற்கும் இடையே பல சண்டைகள் நடந்து கொண்டிருந்தது. கடைசியாக அது பாச போராட்டமாகவே முடிவடைந்தது. இந்நிலையில் ஷிவானி, பாலாஜி இடையே புதுவிதமான நட்பும் மலந்துள்ளது. இது நட்பாக மட்டும் இருக்குமா?? என்பது நாள் போக தான் தான் தெரியும்.

bigg boss 4

நேற்றைய எபிசோடில் ஷிவானி பாலாஜிக்கு சேவகம் செய்ய வேண்டும் என்று டாஸ்க் கொடுக்க பாலாஜிக்கு குடை பிடிப்பது, ஊட்டி விடுவது என பல கூத்துக்கள் நடந்தது. இந்நிலையில் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்க்கு யாரை அதிகமாக மிஸ் செய்கிறீர்கள்’ என்று சொல்ல வேண்டும் என்று டாஸ்கை கொடுத்தது. இதில் அனைவரும் தங்களுக்கு விருப்பமானவரை கூறினார்.

bigg boss

இதில் ரம்யா பாண்டியன், அர்ச்சனா மற்றும் சுரேஷ் போன்றவர்களின் பேச்சு பலரையும் கண்கலங்க வைத்தது. அடுத்ததாக அனிதா பேசிய பொது அனைவரும் கேலி செய்து பேச ஆரம்பித்து விட்டனர். மேலும் அனிதா தொடர்ந்து பேச ஆரம்பித்து முடிப்பதாகவும் இல்லை. என் கணவர் தான் எனக்கும் எல்லாம் என்று கூற ஆரம்பித்து அனைத்து கதைகளையும் சொல்ல ஆரம்பிக்கிறார்.

bigg boss

ரம்யா பாண்டியன் ஆஜித், பாலாஜி மற்றும் ஷிவானி சிரிப்பை அடக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் சம்யுக்தா நீ பேசிய வரைக்கும் போதும் என்று மூஞ்சியில் அடித்தார் போல சொல்லுகிறார். இதனால் மறுபடியும் அழ ஆரம்பிக்கிறார். இவ்வாறு அழுகை, சண்டை, காதல், பாச போராட்டம் என பல முகங்களுடன் பிக் பாஸ் நகர்ந்து கொண்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

bigg boss

இப்பொழுது பிக் பாஸ் வெளியிட்ட ப்ரோமோவில் சுவாரசியம் குறைவாக உள்ள 2 நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறுகிறார். இதனால் ஆரி மற்றும் அனிதாவை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் வீட்டில் பல சண்டைகள் ஏற்பட்டுள்ளது. இதுவரையிலும் அமைதியாக இருந்த ஆரி இங்கு குரூப்பிஸம் நடப்பதாக கூறுகிறார்.

bigg boss

யார் யார் இங்கு குரூப்பிஸம் நடத்துகின்றனர் என்று என்னால் தெளிவாக சொல்ல முடியும், ஒவ்வொருவரின் முகத்திரையும் என்னால் கிழிக்க முடியும் என்று கோவமாக கூறுகிறார். வழக்கம் போல அர்ச்சனா இதற்கு கருத்து சொல்கிறேன் என்று கண்டபடி பேசுகிறார். இன்றைய நிகழ்ச்சியில் தரமான சம்பவங்கள் காத்துக்கொண்டுள்ளது என்பது ப்ரோமோவை பார்த்தாலே தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here