பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது யார் யார் எப்படி?? என்று யூகிக்க முடியாத அளவிற்கு ஓடிக்கொண்டுள்ளது. மேலும் 35 நாட்களை வெற்றிகரமாக கடந்த போட்டியாளர்களுக்கு இந்த வாரத்தில் தீபாவளி கொண்டாட்டமாக நோ எலிமினேஷன் என்று சொல்லி பிக் பாஸ் இன்ப அதிர்ச்சியளித்தது. தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது.
பிக் பாஸ்
இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சண்டைகள் வந்து போனது. பாலாஜி, சனம், ஆரி இடையே வழக்கம் போல பல தகராறுகளும் வந்து போனது. மேலும் யாரும் எதிர்பாராத விதமாக சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டை விட்டு வெளியேறினார். அவரே இந்த வீட்டில் குரூப்பிஸம் நடப்பதாகவும் கூறினார். இந்த வாரத்தில் சம்யுக்தா, பாலாஜிக்கு சாதகமாக மட்டுமே நடந்துகொண்டதாகவும் நேரடியாகவே கூறினார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இது சுரேஷ் கருத்து மட்டுமல்ல சக போட்டியாளரின் கருத்தாகவும் இருந்தது. மேலும் பாலாஜியை கமல் நடந்தவற்றை விசாரித்து வெளுத்து வாங்கினார். இதனால் நேற்றைய எபிசோடில் இருந்து அமைதியாகவே உள்ளார் பாலாஜி. இந்த வாரம் தீபாவளி சிறப்பாக எலிமினேஷனும் கிடையாது என்று கூறிவிட போட்டியாளர்கள் ஏக சந்தோஷத்தில் உள்ளனர்.
மேலும் தற்போது பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது ஒரு கிராமத்து போட்டிகளமாக உள்ளது. அர்ச்சனா குடும்பத்தில் மூத்தவராக உள்ளார். குடும்ப சொத்துக்களுக்கு அவரே பொறுப்பாகவும் உள்ளார். அந்த சொத்து பத்திரங்களை அடைவதே போட்டியாளர்களின் இலக்கு.
ஆனால் அர்ச்சனா தன்னை சந்தோசமாக வைத்திருப்பவர்களுக்கு இந்த பத்திரத்தை கொடுப்பதாக கூறுகிறார். இதில் சோம் மற்றும் ரம்யா இளம் தம்பதிகள். கேபி அவர்களின் மகளாக நடிக்கிறார். இவர்கள் மூவரும் கூட்டாளிகள் அதாவது அர்ச்சனாவுக்கு தெரியாமல் அந்த பத்திரங்களை திருட வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏற்கனவே சோம், ரம்யா இடையே காதல் இருப்பதாக போட்டியாளர்கள் கலாய்த்து வரும் நிலையில் பிக் பாஸ் இப்படி ஒரு டாஸ்கை கொடுத்துள்ளார். ஏற்கனவே ஒரு காதல் ஜோடி வீட்டில் இருக்கும்போது இப்பொழுது புதிதாக இனொரு ஜோடி உருவாகி விடுமோ?? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.