பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படம் பாதியில் ட்ராப் ஆனதற்கு உண்மையான காரணத்தை போட்டு உடைத்த பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.
வணங்கான் திரைப்படம்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் தான் இயக்குனர் பாலா. சமீபகாலமாக எந்த தயாரிப்பாளரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வந்தனர். அதுவும் அவரது மனைவி விவாகரத்து வாங்கி சென்றது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் இயக்குனர் பாலா. அவரை தெம்பேத்தும் விதமாக சூர்யா மற்றும் சிவகுமார் பாலாவுக்கு வாய்ப்பு கொடுத்தனர். அந்த வகையில் வணங்கான் கதையை உருவாக்கி அதில் சூர்யா நடிப்பதற்கு கால் சீட் வாங்கி வைத்தார் பாலா.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அவர்களின் காம்போவில் வெளிவந்த நந்தா, பிதாமகன் போன்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள். அதே போல் இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்திருந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த படத்தில் இருந்து சூர்யா விலகியுள்ளார். அவர் விலகியதற்கு சோசியல் மீடியாவில் பல காரணங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு காரணத்தை தெரிவித்துள்ளார். வணங்கான் திரைப்படம் ட்ராப் ஆனதற்கு காரணம் பாலாவின் பொம்பள சொக்கு தான். ஏனென்றால் இப்படத்தின் ஷூட்டிங் போது ஒரு ஹோட்டலில் நடிகை கீர்த்தி ஷெட்டி, பாலாவும் பக்கத்து பக்கத்து ரூம் எடுத்து தங்கியுள்ளனர். ஆனால் சூர்யாவுக்கு மட்டும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து 15 km தள்ளி இருந்த ஹோட்டலில் தங்க வைத்துள்ளார் பாலா . இதனால் சூர்யாவுக்கும் பாலாக்கும் பல கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.