வங்கிகளில் வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35% உயர்த்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
வட்டி விகிதம் :
நாடு முழுவதும், உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி சேவைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். என்னதான் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை நடைமுறையில் இருந்தாலும், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை கருதி அதிக மக்கள் நேரடி வங்கி சேவையையே பயன்படுத்துகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுபோக தனி நபர் கடன், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான லோன் போன்ற சேவைகளுக்காக வங்கிகளை அதிகம் நம்பி இருக்கின்றனர். இந்த நிலையில் வங்கிகள் வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை, 0.35% உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்த மத்திய அரசு.., உச்ச நீதிமன்றத்தில் தொடரும் விவாதம்!!
இதனால் இதற்கான ரெப்போ வட்டி விகிதம் 5.9% லிருந்து 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் வட்டி உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் கடன்களுக்கான இஎம்ஐ மற்றும் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.