மீண்டும் வீடு திரும்பும் பாக்கியா எடுத்த அதிரடி முடிவு.. தன் சதி வேலையை தொடங்கிய கோபி – Unexpected ட்விஸ்ட்!

0
மீண்டும் வீடு திரும்பும் பாக்கியா எடுத்த அதிரடி முடிவு.. தன் சதி வேலையை தொடங்கிய கோபி - Unexpected ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் பித்தலாட்டம் தெரிந்த பின் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி தன் மசாலா கம்பெனியில் தங்கி வருகிறார். வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் பாக்கியாவை சமாதானம் செய்ய முடியவில்லை. இதனால் கோபி பாக்கியாவிடம் சென்று வீட்டுக்கு வர சொல்ல பாக்கியா சத்தியம் கேக்கிறார்.

ஆனால் மனதெல்லாம் ராதிகா பித்து பிடித்து திரியும் கோபி ‘நீ இல்லாமல் வாழமுடியாது ராதிகா’ என சொல்ல கோபியை அடிக்காத குறையாக துரத்தி விடுகிறார் பாக்கியா. இந்நிலையில் பாக்கியா மறுநாள் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு குடும்பத்தினரை ஒருமுறை சென்று பார்க்கலாம் என வீட்டிற்கு வருகிறார். அனைவரும் பாக்கியாவை பார்த்து சந்தோஷப்பட கோபி மட்டும் ஒருவழியாக பிரச்சனை முடிந்தது என நினைக்கிறார்.

ஆனால் பாக்கியா தன் உடமைகளை எடுத்து செல்ல தான் வந்துள்ளார். மேலும் இனியாவையும் தன்னுடன் அழைத்து செல்ல வந்துள்ளார். பாக்கியா தன்னை விட்டு செல்ல நினைக்கிறார் என்பது கோபிக்கு கண்டிப்பாக ஆனந்தமாக தான் இருக்கும். பாக்கியாவின் இந்த மனநிலையை பயன்படுத்தி விவாகரத்து பெற்று ராதிகாவை திருமணம் செய்ய கோபி இனி காய்களை நகர்த்துவார். அடுத்து சீரியல் எவ்வாறு திசைமாறப்போகிறது என பொறுத்து இருந்து பார்ப்போம்..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here