உலக கோப்பையால் நடந்த சோகம்…, கேப்டனை மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!!

0
உலக கோப்பையால் நடந்த சோகம்..., கேப்டனை மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!!
இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடரானது, பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு இறுதிப் போட்டியை எதிர்நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான் அணியானது 9 போட்டிகளில் 4 ல் மட்டும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இதனால், உலக கோப்பையை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் அணியில் தற்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதாவது, அனைத்து வடிவிலான பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் தான் விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது (PCB) ஷான் மசூத்-ஐ ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டனாகவும், ஷஹீன் அப்ரிடி-ஐ டி20 அணிகளுக்கான கேப்டனாகவும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here