வளரும் நடிகைகளின் கஷ்டத்தை உருக்கமாக கூறிய சசிகுமார் பட நடிகை!!!

0

தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகைகள் புதிதாக அறிமுகமாகிய வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் முன்னணியில் இருக்கும் இளம் நடிகை தான் அதுல்யா ரவி. இவர் தற்போது  ஜெய்யுடன் எண்ணித்துணிக என்ற படத்தில் நடித்து வருகிறார்.அந்த படத்தின் அனுபவத்தையும் வளரும் நடிகைகளின் கஷ்டத்தையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுல்யா ரவி அவர்களின்  படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் தனக்கென ரசிகர்களை பெற்றவர். இதனால் அவருக்கு  தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு காரணமாக  சொல்லப்படுவது அவருடைய உடலமைப்பு தான்.சமீபகாலமாக அதுல்யா ரவி எப்படிப்பட்ட  கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று நடித்து வருகிறார். தற்போது ஜெய்யுடன் எண்ணித்துணிக எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக இவர் பட்ட கஷ்டத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

  அவர் கூறியதாவது, அதுல்யா ரவி சமீபத்தில் தான் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அதன் பின் சற்றும்  ஓய்வெடுக்காமல் ஒரு சில மணி நேரங்களிலேயே படப்பிடிப்பு தளத்திற்கு சென்று உள்ளார். இதனால் 3 நாட்கள் தொடர்ந்து படங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் இப்படத்தில் ஒரு சண்டைக்காட்சி நடித்தது மறக்க முடியாத அனுபவத்தை தந்ததாக  தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ரத்தம் போன்ற திரவத்தை பலூனில் ஊற்றி தனது உடலில் கட்டி வைத்து,துப்பாக்கியால் சுடும் போது இயக்குனரிடம்  இருக்கும் ரிமோட் பொத்தானை அழுத்தும் போது அந்த பலூன் வெடித்து உடல் முழுவதும் ரத்தம் வருவது  மாதிரியான காட்சியில் நடித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் நான் அமெரிக்கா சென்று திரும்பியதில் இருந்து  சில மணி நேரம் கூட ஓய்வின்றி நடித்ததால் இந்தக் காட்சியில்  பலூன் வெடித்த சத்தம் கேட்டவுடன் உண்மையாகவே நான்  மயங்கி கீழே விழுந்து விட்டேன். அதனைப் பார்த்த படக்குழுவினர் பாராட்டினர். பின்புதான் மயங்கி விழுந்தது அவர்களுக்கு தெரிந்தது என கூறியுள்ளார். இதன்மூலம் வளரும் நடிகைகள் எந்த மாதிரியான கஷ்டமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here