இந்தியாவில் ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை அடுத்த நவம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தானில் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவித்து இருந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் நவம்பர் 23ஆம் தேதி அதிக அளவிலான திருமண நிகழ்வுகள் நடைபெற இருப்பதால், பலரும் வாக்களிக்க இயலாமல் போக வாய்ப்புள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 25 ஆம் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.