மாநிலத்தில் பிப்.1 முதல் ரத்தாகும் இரவு நேர ஊரடங்கு – புதிய தளர்வுகளை அறிவித்த முதல்வர்!!

0

நம் அண்டை மாநிலமான அசாமில், விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு நேரத்தில் மாற்றத்தை அறிவித்து, மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தளர்வுகள் அறிவிப்பு:

இந்தியாவில் வைரஸ்  பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி  ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  2, 277 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு முறையில் முக்கிய தளர்வுகளை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதன்படி வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மாநிலத்தில் கொரோனா இறப்புகள் ஏதும் இல்லாததால் முதல்வர் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில், அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஒரு மணி நேர தளர்வு பொதுமக்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here