பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான இறுதிப் போட்டியில் அர்ச்சனா டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார். இதனால் இவருக்கு இப்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவரது வெற்றியை இவர் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இவர் வெற்றி பெற்றது குறித்து மாயா முக்கிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதாவது மாயா அவரது இன்ஸ்டா பக்கத்தில் “பணம் கொடுத்து நீங்கள் கோப்பையை வெல்லலாம். ஆனால் மக்களிடம் அன்பை வெல்ல முடியாது. அது எனக்கு கிடைத்து விட்டது” என சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும் போது அர்ச்சனா பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றிருப்பார் என்பது போல் வதந்திகள் வந்து கொண்டே உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்., உச்சம் தொடப்போகும் இந்த மாத ஊதியம்? வெளியான முக்கிய தகவல்!!!