ஒரு நகைச்சுவையாளராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற அறந்தாங்கி நிஷா; கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
பிரபல காமெடி நடிகை பதிவு:
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில் அதில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் என மருத்துவர்கள், சுகாதாரதுறையினர் தெரிவித்து வருகிறார்கள்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று இரண்டாம் இடத்தினை பெற்ற அறந்தாங்கி நிஷா தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
அதில் அவர் “COVISHIELD தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நல்ல அணுகுமுறை தெளிவான விளக்கத்தோடு ஊசி போட்ட செவிலியர்களுக்கு நன்றி. எனக்கு தடுப்பூசி போடுவதற்கு உதவி செய்த விகடன் மணிகண்டன், மற்றும் புதிய தலைமுறை பிருந்தா, அவர்களுக்கு நன்றி. சரியான விளக்கம் அங்க கொடுக்கிறாங்க யாரும் பயப்பட வேணாம் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!