இந்திய சினிமாவின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் பேசாதவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சினிமா, இசை, கச்சேரி என்று பிசியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பம், மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்து பொது வெளியில் பெரிதாக பேசுவது கிடையாது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் மற்றும் மகன் இருவரும் தங்களது அப்பாவைப் போல இசையமைப்பில் பயணிக்கத் துவங்கியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படி இருக்க, ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக தனது அப்பா பற்றி பேசிய விஷயம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ‘நீங்கள் நடந்துகொள்ளும் விதம் தான் உங்கள் குழந்தைகளுக்கான சிறந்த அட்வைஸ். நீங்கள் அவர்களுக்கு கண்ணாடி மாதிரி. என் அப்பா ஒரு சிறந்த மனிதர். அவருக்கு மகனாகப் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். என் பெற்றோரின் பெயரை காப்பாற்றத்தான் நான் அவர்களுக்கு மகனாகப் பிறந்திருக்கிறேன்’ என்று பேசியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.