டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அன்மையில் கைது செய்தனர். அதன் பின்னர் மார்ச் 28ஆம் தேதி (நாளை) வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் “கெஜ்ரிவால் வழக்கு தொடர்பான விசாரணையை நியாயமானதாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். சிறையில் உள்ள முதல் மந்திரிக்கு உரிய சட்ட உதவி கிடைக்கவும் வழி செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
Enewz Tamil டெலிக்ராம்
IPL 2024: CSKவுக்கு எதிரான போட்டி.. குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு அபராதம்!!