கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் இதன் தாக்கம் அதிகரித்து உள்ளதால் தனியாக இருப்பவர்களிடம் கொள்ளையர்கள் அத்துமீறுகின்றனர். இதிலிருந்து பாதுகாத்து கொள்ள அமெரிக்கர்கள் துப்பாக்கி வாங்கி குவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் டூ கொள்ளையர்கள்..!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரசால் 3,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 69 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவில் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டத் துவங்கியுள்ளதால் அமெரிக்க மக்கள் வெளியில் நடமாட அஞ்சுகின்றனர்.
துப்பாக்கி கடைகளில் பொதுமக்கள்..!
இதனால் அமெரிக்க மக்கள் கொள்ளையர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி வாங்க ஆயுதங்கள் விற்கும் கடைகள் முன் நீண்டவரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர். கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |