ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியா ஏற்றுமதி செய்யாவிட்டால் தகுந்த பதிலடி தரப்படும் – டிரம்ப் எச்சரிக்கை..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைய தொடங்கி இருப்பதால் மத்திய அரசு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்து இருந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸிற்கு எதிராக உயிர் காக்க பயன்படும் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்யாவிட்டால் தகுந்த பதிலடியை சந்திக்கும் என எச்சரித்து உள்ளார்.

அமெரிக்காவில் தீவிரம்:

உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தான் உள்ளது. அங்கு இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து உள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியமால் திணறி வருகின்றனர் அந்நாட்டு அதிகாரிகள்.

மலேரியா மருந்து:

கொரோனா வைரஸிற்கு எதிராக மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து நல்ல பலன் அளிப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்ததை அடுத்து அதற்கான ஏற்றுமதியை மத்திய அரசு தடை விதித்து இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இதன் இருப்பு குறைவாக இருப்பதால் மற்ற நாடுகளிடம் மருந்துகளை அனுப்புமாறு கோரி வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுடன் பல ஆண்டுகளாக நாம் வர்த்தகம் செய்து வருகிறோம். மேலும் நட்பு நாடான இந்தியா மருந்து ஏற்றுமதி செய்ய மாட்டோம் என கூறுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அவ்வாறு கூறினால் அதற்கான பதிலடியை சந்திப்பார்கள் என எச்சரிக்கும் தொணியில் பேசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here