அமெரிக்கா பாலம் விபத்து.. 22 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர்.. கப்பல் நிறுவனம் தகவல்!!

0

அமெரிக்க நாட்டில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கி பாலத்தின் மீது நேற்று முன்தினம் (மார்ச் 26) அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று மோதியது. இந்த விபத்தில் பாலம் உடைந்து நீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அமெரிக்க கடலோர காவல் படையினர் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். தற்போது இது தொடர்பாக ஓர் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது பாலம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட 6 ஊழியர்களை காணவில்லை என்றும் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சரக்கு கப்பலில் உள்ள 22 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here