3 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி ரெடி – சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை அதிகாரி அறிவிப்பு!!

0

மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் ஆறு மாதங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

தடுப்பூசி ரெடி :

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு எதிராக, தடுப்பூசி செலுத்துவதை அனைத்து நாடுகளின் அரசும் அதிகப்படுத்தி வருகிறது. தற்போது வரை கோவாக்ஸின்,கோவிஷீல்டு,ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் எதிராக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு  அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட,இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் இருக்கும் இந்த தடுப்பூசி, இந்தியாவில் வர உள்ளதை அடுத்து அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here