தமிழகத்தில் செல்வி. ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. கட்சியில் பிளவுகள் ஏற்பட்டு பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. கட்சி பொதுக்குழுவில் திட்டமிட்டபடி பொதுச்செயலாளர்க்கான தேர்தலை நடத்தி தீர்மானங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி உள்ளார். தற்போது இந்த தேர்தலை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இவரின் ஆதரவாளர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை தனித்தனியாக தாக்கல் செய்திருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கடந்த 22ம் தேதி வழக்கினை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின் எழுத்துபூர்வமாக பதிலளிக்க கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். இதைத்தொடர்ந்து எடப்பாடி தரப்பில் “உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரிலே பொதுக்குழு மூலம் திட்டமிட்டு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம்.” என தெரிவித்து இருந்தார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் “பொதுச்செயலாளர் தேர்தலில் நான் தலையிடுவேன் என திட்டமிட்டே என்னை கட்சியை விட்டு நீக்கி உள்ளனர். எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.” என முக்கிய வாதங்கள் எழுத்துபூர்வமாக தெரிவித்து இருந்தனர்.
ஜீ தமிழ் சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!
இன்று (மார்ச் 28) இரு தரப்பு வாதங்களை பரிசீலித்த நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தனர். இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டதால் இவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.