விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் ஹீரோ ஹீரோயினாக நடித்தவர்கள் தான் விஷ்ணு காந்த் – சம்யுக்தா. இந்த தொடரில் நடித்ததன் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட அவர்களின் வாழ்க்கை இரண்டு மாதங்களிலே முடிவுக்கு வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் அவர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை அடுக்கி கொண்டே செல்கின்றனர். சோசியல் மீடியாவில் இதனை கொண்டு வந்து அவர்களின் பெயர்களை அவர்களே கெடுத்து கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் சம்யுக்தா எந்த தவறும் செய்திருக்க மாட்டார் என்று சிலர் அவருக்கு சப்போர்ட் செய்து தான் வருகிறார்கள்.
கிளாமர் நாயகி ஷாலுக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா., அவரே போட்ட பதிவால் ரசிகர்கள் குஷி!!
இந்நிலையில் நடிகை சம்யுக்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதாவது சம்யுக்தா மணப்பெண் கோலத்தில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கானலும், பிரச்சனைகளில் இருந்து மீண்டு வாழ்க்கையில் முன்னேறி வாழ ரெடியாகிவிட்டிர்கள் என்று ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.