தமிழ் சினிமாவின், சூப்பர் ஹிட் நடிகையான ரீமாசென்னின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரல் போட்டோ :
தமிழ் சினிமாவில், அதிக படங்கள் மற்றும் கேரக்டரில் நடிக்கவில்லை என்றாலும், ஒரு சில பிரபலங்கள் மிகவும் பேமஸ் ஆகி விடுவர். அந்த வகையில், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். இந்த படத்திற்கு பின் விஜய், விக்ரம், விஷால் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஹீரோயினாக களமிறங்கி வந்த இவர், சிம்பு நடித்த வல்லவன் படத்தில் அவருக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். அதுவும் இந்த படத்தில் “நான் கீதாடா” என்று அவர் சொல்லும் வசனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. கடந்த 2012ல் ஷிவ் கரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், அதன் பிறகு சினிமாவை விட்டு விலகினார்.
இவருக்கு தற்போது ருத்ர வீர் சிங் என்ற ஒரே ஒரு மகன் உள்ளார். இவர் தன் குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட பேமிலி புகைப்படம், இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ..