‘சீதாராமம்’ படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி படைப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா:
கோலிவுட்டில் நீயா நானா என்று அஜித்தும் விஜய்யும் போட்டி போட்டு கொண்டிருந்த காலகட்டத்தில் நந்தா, காக்க காக்க, உன்னை நினைத்து, கஜினி போன்ற படங்களில் நானும் ஹீரோ தான் என்று மக்கள் மனதில் எண்ணத்தை விதைத்தவர் தான் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் 10 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. அதுமட்டுமின்றி தசாவதாரம் கமலை மிஞ்சி இந்த படத்தில் சூர்யா 13 கெட்டப்கள் போட இருப்பதாக சொல்லப்படுகிறது. அதெல்லாம் விட படம் ஷூட்டிங் முடிவதற்கு முன்பே 500 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை ரீமா சென்னின் கணவரை பார்த்துள்ளீர்களா? குழந்தையுடன் வைரலாகும் பேமிலி போட்டோ!!
இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சூர்யா சிறுத்தை சிவா படத்தை முடித்துவிட்டு சீதா ராமம் படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி எடுக்க இருக்கும் புது படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இயக்குனர் இயக்கிய சீதா ராமம் திரைப்படம் வெறும் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி, 90 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அறிந்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளனர்.