சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தான் பிரியங்கா நல்கார். இந்த தொடரில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இதன் பிறகு ஜீ தமிழிலின் சீதாராமன் என்ற தொடரில் கமிட்டாகி நடித்தார். மேலும் பல வருடங்களாக தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை காதலித்து வந்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டார்.
இதனால் தனது கணவருடன் மலேசியாவில் செட்டிலான இவர் சீதாராமன் சீரியல் விலகினார். இதையடுத்து தற்போது மீண்டும் ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.இவ்வாறு தனது காதல் திருமண வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர் குறித்த ஒரு பரபரப்பு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரியங்கா நல்கார் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்த அவரது திருமண புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார். இதனால் பிரியங்கா நல்கார் தனது கணவரை விவகாரத்து செய்துவிட்டாரா?? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
500 வருட பழமையான மசூதி இடிப்பு., முன்னறிவிப்பு இல்லாமல் நடந்த திடீர் சம்பவம், டெல்லியில் பதற்றம்!!