தென்னிந்திய திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் கௌதமி. ஹீரோயினாக நடித்து அசத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் பின்னர் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இதற்கிடையில் கமல்ஹாசனை காதலித்து சில வருடம் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனால் அவர்களுள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். இதையடுத்து பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் கால்பதித்தார்.
மேலும் சில நாட்களுக்கு முன்னர் பாஜக கட்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். இப்படி இருக்கையில் தற்போது அதிமுக கட்சியில் இவர் இணைந்துள்ளார். மேலும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் எட்டப்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதோடு ஈபிஎஸ்சின் செயல்கள் இவரை ஈர்த்ததாம், அதனால் தான் அதிமுக கட்சியில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். இவ்வாறு இவரது முன்னாள் காதலர் கமல்ஹாசனின் அரசியலுக்கு போட்டியாக இவரின் செயல்பாடுகள் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.