பிரபல நடிகை வீட்டில் இருந்து ரூ.29 கோடி பணம் பறிமுதல் – விசாரணையில் வெளிவந்த பகிர் உண்மை!

0
16 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி கொடுத்த 90ஸ் கனவு நாயகி., அடேங்கப்பா.., இப்போ வரைக்கும் அப்படியே இருக்கீங்களே!!

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.29 கோடி பணம் அமலாக்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் சிக்கிய பணங்கள்:

நடிகர் அர்பிதா முகர்ஜி கடந்த 2004-ம் ஆண்டு மாடலாக தன் கெரியரை துவங்கினார். அதிலிருந்து அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கியது. அர்பிதா ஆறு மொழிகளில் படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை அர்பிதா தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஆசிரியர் ஊழியர்கள் நியமிப்பதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.

இதில் முக்கிய குற்றவாளியாக மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இவருக்கு நெருங்கிய தோழியாக விளங்கிய அர்பிதா முகர்ஜி வீட்டில் ரைடு செய்து கிட்டத்தட்ட 20 கோடி பணங்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அர்பிதா முகர்ஜியின் இரண்டாவது வீட்டில் ரைடு செய்த போது முதல் வீட்டில் இருந்தது போன்று கட்டு கட்டாக 29 கோடி ரூபாய் மற்றும் தங்கத்தகடுகள் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அர்பிதா முகர்ஜியிடம் விசாரணை நடத்திய போது பார்தா சாட்டர்ஜி என் வீட்டின் அறையில் பணத்தை வைத்தார். இதற்கு எனக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அவருடைய ஆட்களுடன் அவரும் வாரத்திற்கு ஒரு முறை வருவார்கள் வந்து பணத்தை எடுத்து செல்வார்கள், உள்ளே எவ்வளவு பணம் உள்ளது என்று கூட எனக்கு தெரியாது என்று விசாரணையில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here