அங்காடி தெரு படத்துல எதார்த்தமான நடிப்பால் எல்லார் மனசையும் கொள்ளை கொண்டவங்க தான் நம்ம அஞ்சலி. இவங்க ஆரம்பத்துல சின்ன சின்ன படத்துல நடிச்சுக்கிட்டு இருந்தாலும் அடுத்தடுத்து இவங்க திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க ஆரம்பிச்சுச்சு.
இவங்க கெரியர்ல மாஸ் படம்னு சொன்னா அது எங்கேயும் எப்போதும் தான். மணிமேகலையா எல்லார் மனசுலையும் இடம் பிடிச்சாங்க. அதுதான் அவங்களுக்கு தூக்கி விட்டுச்சு. அதுக்கு அப்பறம் அவங்க சம்பளமும் கூட ஆரம்பிக்க படவாய்ப்பும் குவிய ஆரம்பிச்சது.
இப்படியே படிப்படியா முன்னேறிக்கிட்டு இருந்த அஞ்சலிக்கு திடிர்னு சறுக்கல் ஏற்பட்டுச்சு. அதுக்கு அப்புறம் அவருக்கு பட சான்ஸ் வராம போகவே நொந்து தான் போனாங்க. அதுக்கு அப்பறம் வாழ்க்கையில பல பிரச்சனை ஏற்பட்டு பல சர்ச்சையில சிக்க ஆரம்பிச்சாங்க.
இப்படியே அவங்க சினிமாவுக்கு கேப் விட ஆரம்பிச்சு இப்பொழுது எந்த படத்துலயும் அவங்கள பார்க்க முடியல. தெலுங்குல மட்டும் சில படங்கள் நடிச்சுக்கிட்டு வராங்க. இப்படி இருக்க அடிக்கடி பல கியூட்டான கிளிக்ஸை வெளியிட்டு வராங்க. அதுல ஒன்னு இப்போ ட்ரெண்டிங்காகிக்கிட்டு இருக்கு.