தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். இவர் மிகப்பெரிய பிரேக் ஒன்றை சினிமா துறையில் எடுத்தாலும் அது இவருக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதே மார்க்கெட்டுடன் ரிட்டர்ன் வந்து படங்களில் நடித்தார்.
தொடர்ந்து மாயா, அறம் என இவர் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்ததால் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயர் கிடைத்தது. தற்போது இவர் ஹிந்தி சினிமாவில் ஷாருக்கானின் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் அப்படத்தில் ஒரு சிறைக்கைதியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது சற்று வித்தியாசமான ரோல் ஆக இருந்தாலும் ரசிகர்கள் மறுபுறம் கவலை அடைந்துள்ளனர். ஏனென்றால் தமிழில் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் ஹிந்தியில் அறிமுக நடிகர் போல தான் பார்க்கப்படுவார்கள். ஒருவேளை நயன் அங்கு நடித்து விட்டு பிறகு தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை என்றால் தமிழில் அவரின் மார்க்கெட் என்னாவது என ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.