பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து, மிகப்பெரிய கம் பேக் கொடுத்த நடிகை திரிஷா குழந்தையாக இருக்கும்போது முக்கிய நபருடன் எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
வைரல் போட்டோ :
தமிழ் சினிமாவில், ஜோடி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, தற்போது அனைத்து திரைகளிலும் ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உருவான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் அடையாளம் தெரியாமல் இருந்த திரிஷாவுக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய கம் பேக்காக இருந்தது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன், அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, சில காரணங்களால் அது நின்று போனது.
தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் குழந்தையாக இருக்கும் போது, அவரது அம்மாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரிஷாவின் அம்மா இவரை மடியில் வைத்து, இருவரும் பாசத்துடன் இருப்பது போன்று வெளியான அந்த புகைப்படத்துக்கு, தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள், இது நம்ம த்ரிஷாவா என மிரண்டு போய் பார்த்து வருகின்றனர்.