பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர் இறப்பு குறித்த முக்கிய தகவலை பிரேத பரிசோதனை செய்த நபர் வெளியிட்டுள்ளார்.
பகீர் தகவல் :
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020 ஜூன் 14ஆம் தேதி, மும்பையில் உள்ள தன் வாடகை குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் இறப்பில் உள்ள மர்மம் விலகாத நிலையில், இது குறித்த முக்கிய தகவல் ஒன்றை, அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த நபர் வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அவர் இறந்த போது, கிட்டத்தட்ட 5 நபர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்தது என்றும், அதில் இருந்த சுஷாந்தின் உடலில் பல கீறல்களும், கழுத்தில் இரண்டு காயங்களும் இருந்தது. அந்த உடலைப் பார்த்ததுமே, அது தற்கொலை அல்ல கொலை தான் என்ற முடிவுக்கு வந்தோம்.
துணிவு போட்டோவால் கேலி கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகர்.., இத அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாரு!!
ஆனால் அப்போது எங்களுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக உடலை, சீக்கிரமாக பிரேத பரிசோதனை செய்து ஒப்படைத்து விட்டோம். 34 வயதான அவர், அந்த இளம் வயதில் இறந்து போன மர்மம் இதுவரை விலக வில்லை, அதை மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் தான் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.