தமிழ் திரையுலகில் நம்பிக்கை நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் விடாமுயற்சி என்ற படத்தை எடுக்க இருப்பதாக அஜித்தின் பிறந்த நாள் அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் அடுத்த எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்காததால் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஏன் சொல்லப்போனால் இந்த படம் ட்ராப் ஆகிவிட்டது போல என்று கூட எண்ணத் தொடங்கி விட்டனர். இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் லுக் டெஸ்ட்டிற்காக லண்டனுக்கு சென்றுள்ளார் என்று தகவல் தெரிந்த பின்னர் தான் அஜித் ரசிகர்களுக்கு உயிரே வந்தது. தற்போது அவர்களை குஷிப்படுத்தும் விதமாக சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வால் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை., வானிலை மையம் அறிவிப்பு!!!
அதாவது நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரம் புனேவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுப்பதில் படக்குழு பிசியாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் குஷியில் கொண்டாடி வருகின்றனர்.