துபாயில் இருந்து புறப்பட்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தாமதமானதால் இருவரின் நிச்சயதார்த்தம் ரத்தானது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கடந்த சனிக்கிழமை அன்று இரவு 8.45 மணிக்கு துபாயில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய விமானம் சரியான நேரத்திற்கு புறப்படவில்லை. விமானம் சற்று தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வெகுநேரம் ஆகியும் விமானம் புறப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். இதனை அடுத்து அவர்கள் அனைவரும் ஓட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டனர்.
இதில் பயணிகளில் இருவரின் நிச்சயதார்த்தம் ஞாயிற்று கிழமை நடக்க இருந்த நிலையில் விமானம் 30 மணி நேரம் தாமதமானதால் தடைப்பட்டது. சனிக்கிழமை புறப்பட வேண்டிய விமானம் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திங்கட்கிழமை தான் புறப்பட்டது. அவர்கள் சரியான நேரத்தில் ஊருக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டதே நிச்சயதார்த்தம் நின்று போக காரணம் என அப்பயணிகள் வேதனைக்குள்ளாயினர்.