தமிழகத்தில் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததில் இருந்து பல்வேறு பகுதிகளிலும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனால் சிவகங்கையில் நடைபெறும் திருவிழாவில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
கழிவுகளை அகற்ற புது யுக்தி.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!!
இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரிக்கப்பட்ட நிலையில், “ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும், தேர்தல் விதிமுறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல.” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.