தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதை உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் தளர்வுளற்ற முழு ஊரடங்கு வருகிற ஜூன் 14-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்கப்படுமா அல்லது நோய்த்தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது பொதுமக்களின் எதிர்பாப்பாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வந்த நிலையில், நாடு முழுவதும் தொடர்ந்து தற்போது தொற்றின் தீவிரம் குறைந்துகொண்டு வருகிறது. தமிழகத்திலும் 36,000-ஐத் தாண்டிச்சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
தற்போது வெளியாகிய தகவலின் அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேச தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசவுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!