நாடு முழுவதும் 322 மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதார இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார். மேலும் பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் உயர்ந்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் குறைய தொடங்கி உள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, கொரோனா தொற்றிலிருந்து மீள்வோரின் விகிதம் 94.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் அதாவது ஜூன் 1-7 வரையிலான பாதிப்பு விகிதமானது 6.3 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 65 சதவிகிதம் குறைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 15 மாநிலங்களில் தொற்று பாதிப்பு விகிதம் 5 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக 322 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!