இன்று 18,023 பேருக்கு கொரோனா – 409 பேர் பலி; தமிழகத்தில் தொடர்ந்து குறையும் தொற்று!!!

0

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,000க்கு கீழ் குறைந்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று 18,023 பேருக்கு கொரோனா:

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், பிரதமர் மோடி மான் கி பாத் மூலம் உரையாற்றினார். தமிழகத்தில் கொரோனாவால் புதிததாக 18,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31045 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 409 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,74,704ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, கோவையில் இன்று 2,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,437பேருக்கும், திருப்பூரில் 995 பேருக்கும், ஈரோட்டில் 1,596 பேருக்கும், சேலத்தில் 975 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் இருந்தது.இந்நிலையில் நேற்று 351 உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயிரிழப்பு 400-ஐ கடந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 409 பேர் உயிரிழந்ததாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here