தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30 ஆம் தேதி வரை கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து தடுப்பூசிப் போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் செல்கின்றனர். தமிழகத்திற்குத் தர வேண்டிய கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியது.
இதையடுத்து தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, “தமிழகத்தில் 7.24 லட்சம் டோஸ்கள் உள்ளன இதேபோன்று, ஜூன் 1ந்தேதி முதல் ஜூன் 15ந்தேதி வரையில் தமிழகத்திற்கு மொத்தம் 7.48 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசின் வழியே கிடைக்கும்” என்று கூறியுள்ளது.
மேலும் வருகிற ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!