சிறுமியின் செயலுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த மெகாஸ்டார் சிரஞ்சீவி!!!

0

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் உரிய படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ வசதியின்றி அல்லல்படுகின்றனர். தற்போது ஆக்ஸிஜன் வங்கிகளை அமைப்பதில் உதவி செய்த சிறுமி ஒருவரை தெலுங்கு மெகா ஸ்டார் பாராட்டி உள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

ட்விட்டரில் நன்றி தெரிவித்த மெகாஸ்டார்:

மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு தனித்துவமான நடிகர் மட்டுமல்ல, நீண்ட காலமாக மனிதநேய நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர். சிரஞ்சீவி தனது தரப்பிலிருந்து முடிவில்லாமல் செய்து வரும் எண்ணற்ற தொண்டுப் பணிகளால், அவரை இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய நன்கொடையாளராக கருதினர்.

சிரஞ்சீவி இதுவரை ரூ .150 கோடிக்கு அல்லது அதற்கும் அதிகமாக செலவு செய்திருப்பார் என்று சிலர் கூறியுள்ளனர். இது இந்திய வரலாற்றில் அவரது தொண்டு பணிகளுக்காக உயரமாக நிற்க வைக்கிறது. நடிகர் சிரஞ்சீவி கொரோனா நிவாரண அறக்கட்டளை என்கிற அமைப்பை உருவாக்கி திரையுலகினரிடம் நிதி திரட்டி பல உதவிகளை வருகிறார்.

அந்த வகையில்; இவரது அறக்கட்டளைக்கு தனது சேமிப்பு மற்றும் பிறந்தநாள் செலவுகளை நன்கொடையாக வழங்க முன் வந்துள்ள பள்ளி சிறுமி ஒருவரை தெலுங்கு மெகா ஸ்டார் பாராட்டி உள்ளார். இது பற்றி சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்ஷி என்ற பள்ளி சிறுமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here