தமிழகம், புதுச்சேரிக்கு கொரோனா 3வது அலை தாக்கும் அபாயமா !!! – ஆக்சிஜன் தயார் நிலையில் இருக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகம், புதுச்சேரியில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதாலும், பலி எண்ணிக்கை உயர்வதாலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மே 24 வரை இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருவதால், ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த காரணத்தினால் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஆக்ஸிஜன் தேவை குறித்து விசாரித்த வழக்கில், 3-வது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் 3-வது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் எப்போதும் ஆக்ஸிஜன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.