தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.2,000 பெறுவதற்கான தேதி அறிவிப்பு !!! – அமைச்சர் பேட்டி
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் ரூ.4000 வழங்குவதற்கான ஆணையில் பதவியேற்ற அன்றே கையெழுத்திட்டார். அதில் ரூ. 2000 ஆனது இந்த மாதமே வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் ரேஷன் கடைகளில் ரூ.2,000 பெறுவதற்கான தேதியை அறிவித்து உள்ளார். அதாவது வருகின்ற மே 15ம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்கள் ரூ. 2000 ஐ ரேஷன் கடைகளில் பெறலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கியுள்ளார். ஏழை எளிய மக்களுக்கு ரூ.2,000 வழங்கும் பணியை கூட்டுறவுத்துறை சிறப்பாக செய்து முடிக்கும் என்று அதில் தெரிவித்துள்ளார்.