மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்போவதாக 2019 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டியதிற்க்கு பின் அங்கு எந்த ஒரு வேலையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடங்கவும் இல்லை மேற்கொள்ளவில்லை. இது குறித்து பல சமூக ஆர்வலர்களும் பத்திரிக்கையாளர்களும் மக்களும் கேள்வி கேட்ட வண்ணம் உள்ளனர். இப்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய தகவலையும் அர்.டீ.ஐ மூலம் வெளியாகி உள்ளது
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய தகவல்..!!
மதுரை தோப்பூரில் 201.75 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.1264 கோடி மதிப்பிலும் உலகத்தின் அதிநவீன வசதிகளுடன் கூடிய 750 படுக்கைகள் மற்றும் 100 மருத்துவ படிப்புகள் ஆகிய வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2015 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது அருண் ஜெட்லி 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப் போவதாக கூறியிருந்தார் அதன்பின் 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டது அதற்குப் பின்பு இதுவரை இரண்டு வருடங்களாகியும் மருத்துவமனை கட்டுவதற்காக பணிகள் எதுவும் தொடங்கவில்லை. மக்களும் சமூக ஆர்வலர்களும் அரசிடம் கேட்டு வந்தனர் அதற்கு லே அவுட் வரவில்லை எனவும் மற்ற வேறு ஏதாவது காரணங்களும் கூறி வந்தது அரசு.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி ஆர்டிஐ மூலம் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காகவும் அமைப்பதற்காவும் கடன் ஒப்பந்தந்கள் ஜப்பான் ஜைக்கா என்னும் நிதி நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ளது ஒப்பந்தங்கள் கையெழுத்து போட்டவுடன் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை மற்றும் அர்.டீ.ஐ தகவல் கூறியுள்ளது